தமிழகத்தின் கொங்கு மண்டலம் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அரங்கேற்றுவதில் தனி முத்திரை பதித்துவருகிறது. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலைப் பேட்டை சங்கர் என சாதிய வன்மத்துக்கு தலித் இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கொங்கு பகுதியில் நிலவிவரும் சாதியம், தீண்டாமை குறித்து புலனாய்வு செய்தி ஒன்றை வழங்கியிருக்கிறது.
இதில், கொங்குமண்டலத்தின் பல பகுதிகள் குறிப்பாக, வெள்ளக் கோயில், காங்கேயம் போன்ற பகுதிகளில் தலித்துகள் கோயில்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் ஒடுக்கும் சாதியினர் நடத்தும் திருமண மண்டபங்களில் தலித்துகளுக்கு எப்போதும் வாடகை விடுவதில்லை என்றும் இந்த கள ஆய்வு செய்தி தெரிவிக்கிறது.
காங்கேயம் எம் எல் ஏவுக்குச் சொந்தமான திருமண மண்டப நிர்வாகியிடன் டைம்ஸ் நவ் செய்தியாளர் நிரஞ்சன் நடத்திய உரையாடலில், ‘அவங்களுக்கு(தலித்) கொடுத்தால் எங்க ஆளுங்க யாரும் இங்க வர மாட்டாங்க. அவங்களுக்குன்னு சின்ன சின்ன மண்டபம் இருக்கு அங்கதான் அவங்க போவாங்க’ என்று தெரிவிக்கிறார் நிர்வாகி. அதோடு என். எஸ். என். நடராஜனுக்கு சொந்தமான இந்த மண்டபத்தை அவர் மகன் பார்த்துக் கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார் இந்த வீடியோவில்.
வீடியோ இணைப்பு கீழே…