ரோஹித் வெமுலாவின் மரணத்துக் காரணமான ஹைதராபாத் பல்கலை துணை வேந்தர் அப்பா ராவ், இரண்டு மாத விடுப்புக்குப் பிறகு பணிக்குத் திரும்புவதாக அறிவித்தார். இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டில் ஈடுபட்டவர்களை மிக கடுமையான முறையில் ஒடுக்கி, பல மாணவர்கள் கைது செய்தது போலீஸ். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பல்கலை நிர்வாகம், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தியது, மின்சாரத்தை நிறுத்தியது. கடந்த இரண்டு உணவு, தண்ணீர் இன்றி மாணவர்கள் தவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பட்டியாக இருந்த மாணவர்கள் தங்களுக்காக உணவை தாங்களே சமைக்க முற்பட்டனர். அப்படி சமைத்துக் கொண்டிருந்த உதய் பானு என்ற ஆய்வு மாணவரை மூர்க்கமாக தாக்கியது போலீஸ். உதய் பானு தற்போது ஹைதராபாத் மருத்துவமனை ஐசியூவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்.