பாரத மாதாகீ ஜே மற்றும் வந்தே மாதரம் என்பது பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்த பயன்படவில்லை; மாறாக நாட்டு மக்கள் ஒன்றுபடுவதை தடுத்து சிறுபான்மையினரை பிளவு படுத்தவே பயன்பட்டது என்று வரலாற்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பாரத மாதாகீ ஜே என்று கோஷம் போட மறுத்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் மஜ்லீஸ் இ இத்தாத் முஸ்லீமான் என்ற கட்சியைச் சேர்ந்த வரிஸ் பதான் என்ற எம்எல்ஏ இடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காரர்கள் பாரத் மாதாகீ ஜே என்று கோஷம் போட மறுப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வரலாற்று நிபுணர்கள் எரிக் ஹாப்ஸ்வம் உள்ளிட்ட பல வரலாற்றியல் அறிஞர்கள், வரலாற்று ரீதியாக இந்த கோஷம் எதனால் வந்தது என்றும் அதனால் இதுவரை என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆதாரத்துடன் கருத்துக்களை கூறியுள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது:பாரத மாதா என்பதும் வந்தே மாதரம் என்பதும் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தின. 1875-ஆம் ஆண்டு வங்கக் கவிஞர் பக்கிம்சந்திர சட்டர்ஜி வந்தே மாதரம் என்ற பாடலை எழுதினார். அந்த பாடல் பெண் இந்து தெய்வம் துர்க்காவைப் போற்றி இந்திய நாட்டை அந்த துர்க்கையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும்.
இந்திய நாட்டை பாரத மாதா என்றும் அவளின் குழந்தைகள் அவளின் துயர்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற வேதனையை வெளிப்படுத்தியும் அந்நியருக்கு எதிராக விழிப்படைந்து கிளர்ந்தெழ வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்திய நாட்டின் தேசிய உணர்வை இந்து மத உணர்வுடன் அதனடிப்படையிலான தேசியமாக சுருக்கி பார்த்தது. இதனால் இயல்பாக அனைத்து சிறுபான்மையினரையும் இந்த கோஷமானது ஒருங்கிணைக்க முடியவில்லை. பாரத மாதா என்பதே மதவாத அடிப்படையை கொண்டிருந்ததால் 1937-ஆம் ஆண்டு தேசிய கீதத்தை எழுதிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர், அன்றைய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருக்கு மத அடிப்படையை கொண்டுள்ளதால் வந்தே மாதரத்தை தேசிய கீதமாக கொள்ள முடியாது என்று கடிதம் எழுதினார். வந்தே மாதரத்தின் அடிப்படை பெண் தெய்வமான துர்க்கையைப் போற்றிப் புகழ்வதாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதனால் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தமதத்தினர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் தாகூரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு வந்தே மாதரத்திலுள்ள மத அடிப்படையிலான கருத்துக்களை காங்கிரஸ் நீக்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் வினாய் சாவர்க்கர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இந்திய தேசத்தை இந்து தெய்வத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவே விரும்பினர். 1923-ஆம் ஆண்டு இந்துத்துவா கோட்பாடு உருவாக்கப்பட்டது. சாவர்க்கர் தனது இந்துத்துவ தேசியம் குறித்த நூலில் தேசியத்தை மதத்தின் அடையாளமாகவே உருவாக்கினார். `இந்திய நிலமானது புனிதமானது, அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடமுண்டு.
அதனால் இந்துஸ்தான் ஆகிறது. மற்ற நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து குடியேறியவர்களுமான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இந்திய நாட்டினர் அல்ல. எனவே இந்துஸ்தான் என்பது புனிதமான தெய்வத்தின் மகள் ஆகும்‘ என்று அவர் எழுதினார். இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பக்கிம் சந்திராவின் பாரத மாதா அடையாளத்தை பெரிதாக்கினர். ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பாரத மாதா தேசிய கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திய பதாகைகளுடன்தான் தொடங்குவர். அது இன்று வரை தொடர்கிறது. எனவே பாரத மாதாகீ ஜே என்பதும் வந்தே மாதரம் என்பதும் இந்துத்துவா சிந்தாந்தத்தின் அடித்தளமாகும். இதற்கும் தேச பக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
உங்கள் கட்டுரை 99.99% பொய்யும் புரட்டுமாக உள்ளது ஏன் இந்த வன்மம் என் புதிய நண்பர் ஒருவர் கூறினார் ஒரு முறை படித்து பார்க்கும்படி நான் இருமுறை படித்து பார்த்தேன் மிகவும் தரந்தாழ்ந்து உள்ளது உங்கள் வெப் தளத்தை என் எதிரிக்கு கூட சிபாரிசு செய்ய மாட்டேன் நானும் என் நண்பர்களும் கலந்துரையாடியதில் நாங்கள் இதுவரை எந்த இயக்கத்திலும் சேர்ந்தில்லை இருந்ததில்லை ஆனால் நாங்கள் குழுவாக ஆர் எஸ் எஸ் இயக்கதில் இணைந்துவிடுவதென உறுதியாக முடிவெடுத்துவிட்டோம் ஒருவகையில் எங்களுக்கு ஆர் எஸ் எஸ் போன்ற தேசபக்த இயக்கத்தில் சேர உந்துதல் ஏற்படுத்திய உங்கள் வெப்தளம் பத்திக்கை இக்கட்டுரையாளர் அனைவருக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி
LikeLike