How did you become an upper caste woman? Because your mother was asked to marry a man from her caste. Her cunt was controlled. How did she become an upper caste woman? Because your grandmother was asked to marry a man from her caste. Her cunt was controlled. How did your grandmother’s mother become an upper caste woman? Because she was asked to marry a man from her caste.
(ad infinitum).
When there’s so much control of the cunt (or we can politely say, the woman’s body), how can you be both a “feminist” and an “upper caste” woman? You can only be one of the above. Last checked, there’s no category of cunt-control-loving feminist?
If you are a woman, and you are proud of being “upper caste” you are proud of the fact that a system of oppression is based on controlling your cunt. Please take your declaration of being “upper caste” and shove it somewhere. Don’t expect others to take it seriously.
வன்மையான கண்டனங்கள். நாம் யாரும் இவர்களை ஆதிக்கசாதியினராகப் பார்க்கவில்லை. இத்தனை ஆண்டு கால பொது வாழ்க்கையில் இவர்கள் தம்மை சாதியற்றவர்களாக அடையாளப்படுத்தவே முயன்றிருக்க வேண்டும். இந்த கட்டுரையின் மூலம் தங்களது ஆதிக்க சாதி லேபிளை ஏன் பறைசாற்றுகிறார்கள்? மிக மிக அருவருப்பாக உணர்கிறேன். இதில் சிலர் தம்மை உயர்சாதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று விளக்குங்கள். தமது ஆதிக்க சாதி அடையாளத்தை பறைசாற்றும் ஒருவருக்கு ஆணவக் கொலைகளை எதிர்க்க என்ன தகுதி இருக்கிறது என எனக்கு நிஜமாகவே புரியவில்லை. ஓர் எழுத்தாளராக, பெண்ணியவாதிகளாக, டி.வி பர்சனாலிட்டிகளாக நீங்கள் சமூகத்தில் ஒரு பொறுப்பான இடத்தை வகிக்கிறீர்கள். உங்கள் செயல்பாடுகள் வழியே நீங்கள் யாரென இந்த சமூகம் அறிந்து வைத்திருந்த அனைத்தையும் இன்றைய தினம் இந்த ஒற்றை பிரகடனத்தில் அழித்துவிட்டீர்கள். உங்களின் சாதி அடையாளத்தை அறிந்து கொள்ளாமல் உங்கள் செயல்பாடுகளுக்காகவும் அறிவாற்றலுக்காகவும் உங்களை மதிப்பவர்கள் இருக்கக் கூடும். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தாழ்த்தப்பட்டவரில்லை என்று சொல்ல வருகிறீர்களா? இது இச்சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? உங்கள் தனிப்பட்ட வாழ்வில் இதனால் விளையக்கூடிய ஆதாயம் என்ன? சுயசாதி அடையாளத்தை இத்தனை மலர்ச்சியோடு வெளிப்படுத்தும் உங்கள் சமூக அக்கறை நாசமாய் போகட்டும். இந்த பிரகடனத்திற்கு பதில் ஓர் ஆணவக் கொலையையே நிகழ்த்தி இருக்கலாம்.
தலித் என்பது சாதி அடையாளம் அல்ல. சாதி ஒழிப்பு அடையாளம். ஆனால் ஆதிக்க சாதி என குறிப்பிடுவது சாதியை காப்பாற்றும் அதை இறுக பிடித்து வைத்துக் கொள்ளும் அடையாளம். அம்பேத்கரும் பெரியாரும் தங்கள் சாதி அடையாளத்தை சொல்லியா சாதி ஒழிப்புப் பணியை மேற்கொண்டார்கள். இட ஒதுக்கீடு போன்ற ஏதொவொரு நேர்மறை காரணத்திற்காக சொல்லியே தீர வேண்டுமென்றாலும் பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்றே குறிப்பிட வேண்டும். தயவுசெய்து உங்கள் தவறுக்கு நியாயம் கற்பிக்க முனையாதீர்கள். ஆணவக் கொலையை எதிர்க்க நம்மை போன்ற அல்லது நீங்கள் பட்டியலிருக்கும் பெண்களை போன்ற படித்தவர்களுக்கு, சமூக அறிவு கொண்டவர்களுக்கு பகுத்தறிவாளர்களுக்கு தனியாக நெஞ்சுரம் தேவையா என்ன? இன்றும் அந்த நிலையிலா நாம் இருக்கிறோம்? நாம் நிகழ்த்த வேண்டியது சாதி ஒழிப்பு உரையாடல்களே தவிர சாதியை காப்பாற்றும் உரையாடல்கள் அல்ல. பல போராட்டங்கள் வாயிலாக அம்பேத்கரும் பெரியாரும் சிறிது சிறிதாக நகர்த்தி வந்திருக்கும் சமூக நீதித் தேரை உங்களை போன்ற அறிவுஜீவிகள் பின்னிழுக்கும் வேலையை செய்யாதீர்கள். ஆணவக் கொலைகளை எதிர்க்க உங்களுக்கு சாதி அடையாளம்தான் தேவைப்படுகிறதெனில் உங்கள் எதிர்ப்பு தேவையே இல்லை. சாதி ஆணவக்காரர்களின் நியாயங்களுக்கும் உங்களது நியாயங்களுக்கும் வேறுபாடில்லை. அவர்கள் கைகளில் இருக்கும் கூரிய அரிவாள் உங்கள் கைகளிலும் இருப்பதாகவே நான் உணர்கிறேன். தினம் தினம் சாதிக் கொடுமையை அனுபவிக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு இந்த ஆதிக்க சாதி பிரகடனம் என்ன உணர்வை ஏற்படுத்தும்? அச்சத்தையா…ஆறுதலையா? சாதியை எதிர்க்காமல் அதன் பல்வேறு வெளிப்பாடுகளில் ஒன்றான ஆணவக் கொலையை மட்டும் கண்டிப்பது ஒருவகையான சாதிச் சூழ்ச்சியே!
சாதியை எதிர்க்க நான் எந்த சாதிக்காரனாகவும் இருக்கத்தேவையில்லை மனிதனாக உணர்வதே போதுமானது.
நான் ஆதிக்க சாதிப் பெண் ஆனால் கவுரவக் கொலைகளை எதிர்க்கிறேன் என்பது உளவியல் ரீதியான ஆணவக் கொலை இல்லையா பெண்களுக்கும் சாதி இருக்கா?
வணக்கம் தோழர்களே,
Ippodhu.com எனும் தளத்தில் சாதி ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு பிரச்சாரம் நடத்தவிருப்பதாகவும், அதில் என்னுடைய பெயரை சேர்த்துக்கொள்ளலாமா என்றும் பீர் முகமது அவர்கள் காலையில் இன்பாக்சில் ஒரு செய்தி வைத்தார்.
எப்போதும் எல்லாவிதமான வன்முறைக்கும், மனித உரிமைப் பிரச்சினைகளுக்கும், அதிகாரத்திற்கும் எதிரான பிரச்சாரங்களுக்கும் கேட்பவரோடு இருக்கும் அறிமுகத்தை வைத்து இதுபோன்ற முயற்சிகளில் எங்களுடைய பெயரை சேர்த்துக்கொள்ளச் சொல்வது வழக்கம்.
அந்த அடிப்படையில் பீர் முகமது அவர்கள் வைத்த தகவலில் உள்ள செய்தியை மட்டுமே, அதாவது சாதி ஆணவக் கொலையை எதிர்க்கிறோம் எனும் கருத்தை வலியுறுத்தும் எனும் நோக்கத்தில்தான் என்னுடைய பெயரை சேர்த்துக்கொள்ளவும் என்று சொல்லி இருந்தேன். அதிலும் கூட, இது வழக்கமாக தயாரிக்கப்படும் ஒரு கடிதமாகவோ அல்லது ஒரு அறிக்கையாகவோ இருக்கும் என்றே எண்ணினேன்.
இந்த உரையாடல்கள் நான் அலுவலகப் பணியில் இருக்கும்பொழுது நடைபெற்றது. கேட்பவர் மீதுள்ள நம்பிக்கை மட்டுமே பெயரைக் கொடுத்ததற்கான காரணம்.
இந்தப் பிரச்சாரம் எப்படி மேற்கொள்ளப்படும், என்ன வகையில் மேற்கொள்ளப்படும் என்று எதையுமே கேட்டறியவில்லை.
மாலை வசுமித்ர தொடர்பு கொண்டு “நான் உயர் சாதிப் பெண்” என்று நீ சொல்லி இருக்கிறாயா என்று கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகே அந்த தளத்தை சென்று பார்த்தேன். இடையில் நந்தினி வெள்ளைச்சாமி என்பவர் என் பெயரை டேக் செய்து ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அப்போதுதான் எனக்கு இந்தப் பிரச்சாரத்தின் ‘ஊடகத் தன்மை’ புரிந்தது.
அதன் வெளிப்பாட்டு தன்மை குறித்த விவாதத்தில் நானும் வசுவும் ஈடுபட்டிருந்தபோது இப்பிரச்சாரத்தில் உள்ள ‘Tonality’ & ‘Message’ எத்தனை ஆபத்தானது என்றும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை அளிக்கிறது என்பதையும் உணர நேர்ந்தது. உடனே பீர் முகமதுக்கு தகவலும் வைத்தேன். ஆனால் அவர்கள் தங்கள் நோக்கத்தை விளக்குவதற்குள் Damage is already Done என்பதுபோல் எம் நோக்கத்திற்கே களங்கம் கற்பிப்பதாக சென்றுகொண்டிருக்கிறது.
ஆகவே, இந்தப் பிரச்சாரத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். என்னுடைய புகைப்படத்தையும், நான் சொல்வதாக அவர்கள் சொல்லியிருக்கும் செய்தியையும் நீக்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நல்ல நோக்கத்திற்காக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்போது, பெயர் சேர்த்துக்கொள்ளலாமா என்று எவரேனும் கேட்டால் அதில் கேள்விகள் கேட்பது அகந்தை நிறைந்த செயலாக இருக்குமோ என்றெண்ணி நபரைப் பொறுத்து ஒப்புதல் அளித்துவிடுவதுண்டு. அது மாபெரும் தவறு என்பதை இந்த பிரச்சினை உணர்த்தியிருக்கிறது.
சாதியை அல்லது இன்னபிற அடையாளங்களைச் சொல்லி வன்முறையை கண்டிப்பதன் மூலம் ஒருவரின் கவனத்தை ஈர்த்து விட முடியும் எனும் இந்த அனுகுமுறை தவறானது. அதற்கு நான் துணை நிற்க விரும்பவில்லை.
முழுமையாக கேட்டறியாமல் பெயர் கொடுத்தமைக்கு வருந்துகிறேன்.
அதே சமயம் பீர்முகம்மது மற்றும் நந்தினி அவர்களின் செயல்பாடுகள் எப்போதும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவே இருக்கும் என்பதையும் நான் நம்புகிறேன். அவர்களும் இந்த பிரச்சாரம் குறித்த பல்வேறு கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதினைந்து வருடங்களாய் மனித உரிமை குறித்தும் சாதி மறுப்பு குறித்தும் கவிதை, இலக்கியம், சினிமா, அரசியல் களப்பணி ஆகிய தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் நான் உயர் சாதி பெண் என்று யாரிடமும் ஒத்துக் கொள்ளவில்லை. சாதீய அடையாளங்களை நம்பாதவளாக என் படைப்பிலும் எழுத்திலும் உரையாடலிலும் வாழ்விலும் முன்வைத்தே நகர்கிறேன். என்னுடன் பயணிப்பவர்களால் இதை நான் சொல்லியிருக்க முடியாது என்ற நம்பிக்கையை கொள்ள முடியும்.
நான் ஒரு உயர்சாதி பெண்……இப்படி சொல்ல உரிமை இல்லை என்பதே சண்டியர்த்தனம். இடம் பொருள் ஏவல் கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். திராவிட போலித்தனங்களில் சாதியை மறைப்பது ஒரு மனப்பிறழ்வு. சாதி, சமயம், இனம், ஊர், குடும்பம், கல்வி…இவை நம் வரலாறு. நம் சிந்தனையில் வரலாற்றின் தாக்கம் இல்லை என்று சொல்வது ஏமாற்று வேலை. அந்த தாக்கங்களை தாண்டி, மறுத்து சிந்திக்கிறேன் என்று சொல்வதே யோக்கியன் மொழி. தாக்கம் இருக்கிறதா இல்லையா என்று சமூகமே தீர்ப்பு சொல்ல வேண்டும். வரலாறு மறைப்பது ஒரு விதமான மேட்டுக்குடி நூதன பாசாங்கு. பெண்ணியம் ஒரு மேம்பட்ட சிந்தனா நிலை. அவ்வளவே. அந்த நிலை ஒன்றும் புனிதம் அல்ல….பிறந்த சாதியை ஒளித்துவைக்கும் அளவுக்கு.
LikeLike