கர்நாடகாவில் கொப்பல் என்ற இடத்தில் கொப்பல், நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பா.ஜ.வைச் சேர்ந்தவரை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மதச்சார்பற்ற கட்சியினர் ஒரு சேர கையை தூக்கினர். இதில் கலந்து கொண்ட சுயேட்சை பெண் கவுன்சிலர் விஜயா என்பவர் கையை தூக்காமல் காங். கட்சியை ஆதரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கோதிஹால் என்பவர் அந்த பெண் கவுன்சிலரை சரமாரியாக தாக்கினார்.
இது வீடியோவாக பதிவாகி டி.வி.சானல்களில் வைரலாக பரவியுள்ளது. பெண் கவுன்சிலர் கொடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.