சட்டமன்ற தேர்தல் கூட்டணி உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சென்னையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார்.
கேள்வி:– தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா காலூன்ற முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான டி.ராஜா கூறியிருக்கிறாரே?
பதில்:– “இந்தியாவில் நடந்த முதல் பொது தேர்தலின் போது 2–வது பெரிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. இப்போது ஒரு சீட் கட்சியாக மாறிய பிறகும் கம்யூனிஸ்டு தலைவரின் செருக்கு குறையவில்லை என்பதையே காட்டுகிறது.
நாடு முழுவதும் கம்யூனிசத்தை அப்புறப்படுத்த மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கேரளாவுக்கு நான் பொறுப்பாளர். அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்.
தமிழக அரசியலில் கணுக்கால் அளவு கூட உயரம் இல்லாத போது அவர்கள் இவ்வாறு கூறுவது நகைப்புக்குரியது.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.