டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கின்றனர். இவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாக சொல்லப்பட்டது பொய்யான குற்றச்சாட்டு என பேசப்படும் நிலையில், இந்தியாவின் முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹைதரபாத்தில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.