சிவகாசி அருகே உள்ள இ.சொக்கலிங்கபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 40 அறைகள் கொண்ட இந்த ஆலையில் தொடர்ந்து வெடித்து வருவதால் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகி உள்ளன. பட்டாசுகள் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ அணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. யாருடைய உயிருக்கும் சேதம் இல்லை என தெரியவந்துள்ளது.
பதிவு மேம்படுத்தப்பட்டது.