ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்று.
ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் சொல்கிறார். “அப்படியே தடை வந்துட்டாலும் கூட எங்கிட்டே இருபது ஏக்கர் இடம் இருக்கு. முன்னூறு காளைகள் இருக்கு. நான் நடத்திட்டுப் போறேன். யாரென்ன பண்ணுவாங்கன்னு பார்த்துக்கறேன்”
அவருக்கு பதிலடியாக ராதா ராஜன் என்கிற விலங்குகள்நல ஆர்வலர் சொல்கிறார். “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன். என்னை வந்து நீங்க கேட்கக்கூடாது”
நெறியாளர் குணசேகரன் அப்படியே திகைத்துப் போகிறார். சீமானுக்கு என்ன பதிலடி கொடுப்பது என்றே தெரியவில்லை. அந்த விவாத மேடையில் இருந்த யாரும் இந்த பார்ப்பனக் கொழுப்பு வாதத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருந்தது.
திமுகவின் மனுஷ்யபுத்திரனோ, தமிழன் பிரசன்னாவோ.. அதிமுகவின் சமரசமோ, மா.கம்யூவின் அருணனோ அல்லது கட்சிசாரா இளங்கோ கல்லாணையோ, எவிடென்ஸ் கதிரோ அந்த விவாதத்தில் இருந்திருந்தால் இப்படி பேசியிருக்க முடியுமா?
இங்கு மட்டுமல்ல. அம்பேத்கரிய, பெரியாரியவாதிகள் இடம்பெறாத இந்தியாவின் எந்த மேடைகளிலும் தமிழ்தேசியம், திராவிடம், மார்க்ஸியம், சமூகநீதி மாதிரி முன்னேற்ற சிந்தனைகளோடு மனிதமும் பார்ப்பனத் தினவெடுத்த சீண்டல்களில் தோற்கும் என்பதே யதார்த்தம். அரசியல் கற்காமலேயே அரசியலில் எல்லாம் தெரியும் என்று 2009க்கு பிறகு வாய் மட்டுமே கிழிய பேசும் காளான்கள் இதை முதலில் உணரவேண்டும்.
யுவகிருஷ்ணா, பத்திரிகையாளர்.
அப்போ…
சீமான் தன்னோட 20 ஏக்கர் நிலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துறனு சொன்னதுக்கு….திருமதி ராதா ராஜா அவர்கள் தங்கள் வீட்டிலே தீண்டாமை பிராட்டிக்ஸ் பண்ணுவேன்…எவனும் கேட்கக்கூடாதுன்னு செலரங்களே….அப்போ அவரை அந்த வேலைய செய்ய சொல்லுங்க….அப்புறம் சீமானுக்கு அறிவுரை சொல்ல வாங்க…
சொல்றது யாரு வேணுனாலும் சொல்லலாம் ஆனா அது அந்த இடத்துல இருந்து செய்யணும்…
சும்மா பட்டிமன்றம் போட்டு பேசறதுக்கு இது ஒன்னும் விட்டு ப்ரஷனை இல்ல…நம்ம தமிழநாட்டு பிரச்சனை… அத கொஞ்சமது நெனஷிப்பருங்க….நீங்களும் தமிழச்சி தான….வேற யாரும் இல்லைதானே….
LikeLike