டெல்லியில் 15 நாள்களுக்கான வாகனக் கட்டுப்பாடு திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, ஒற்றைப்படையில் முடிவடையும் பதிவு எண் கொண்ட கார்கள், ஒற்றைப்படை தேதிகளான ஜனவரி 1, 5, 7, 9, 11, 13, 15 ஆகிய நாள்களில் செல்ல அனுமதிக்கப்படும்.
இரட்டைப் படை பதிவு எண் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளான 2, 4, 6, 8, 12, 14 ஆகிய நாள்களில் செல்ல அனுமதிக்கப்படும்.
இந்த 15 நாள்களில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்து வாகனங்களும் செல்லலாம். டெல்லியில் இயக்கப்படும் வெளி மாநில வாகனங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது.
15 நாள்களுக்கான வாகனக் கட்டுப்பாடு திட்டம் ஜனவர் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து ஒற்றைப்படையில் பதிவு எண் கொண்ட கார்களை வைத்திருக்கும் டெல்லி அமைச்சர்கள், ஆட்டோ, அரசு பேருந்து, சைக்கிள், அல்லது நண்பர்களின் கார்களில் செல்ல முடிவெடுத்துள்ளனர்.