திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த காஜா முகைதீன் என்ற இளைஞர், கடந்த 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் ஐந்து தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய ஏழு பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:
பாஜக களக்காடு ஒன்றிய செயலாளர் கதிர் வேல் சாமி, சாலை புதூரைச் சேர்ந்த மகேஷ், களக்காடு ஜான்ஷன் தினேஷ், களக்காடு பாஜக ஒன்றிய பொதுசெயலாளர் முத்துராமன், ஏர்வாடி மணிகண்டன், ஏர்வாடி ராஜபாண்டி, ஏர்வாடி சுதாகர் என்ற மணி.கைதுசெய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.