நெல்லை ஏர்வாடி காஜா முகைதீன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான, பா.ஜ.க.வின் களக்காடு ஒன்றியச் செயலாளர் கதிர்வேல்சாமி உள்ளிட்ட, சங்பரிவார் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஜா கொலையான உடனேயே, ஊடகங்கள் அதை திசைமாற்ற முயன்றன. பெண் தொடர்பால் நிகழ்ந்த கொலை என்றும், காஜாவின் ஆட்டோவில் கடைசியாகப் பயணித்தவர் விபச்சார அழகி என்றும் எழுதின. எனினும் ஊடகங்களின் பொய்யை புறந்தள்ளி, காஜாவின் கொலைக்கு நீதிகேட்டு வெகுமக்கள் உறுதியுடன் போராடியதால், இப்போது உண்மைக் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.
ஆடிட்டர் ரமேஷ் படுகொலையானபோது, பா.ஜ.க.வின் மகளிர் அணியைச் சார்ந்த ராஜேஸ்வரி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். அந்தக் கோணத்தில் விசாரிக்கச் சொல்லி எழுதாத ஊடகங்கள், கொலைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என முன்கூட்டியே அறிவித்தன.
‘த்தூ’ என ஊடகங்களை நோக்கி விஜயகாந்த் உமிழ்ந்தது, அநாகரிகச் செயல் என்றபோதும், அதற்கு ஆதரவு பெருகுவதற்கு காரணமே ஊடகங்கள்தான்.
ஆளூர் ஷாநவாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்.